Saturday, January 24, 2015

கிருஷ்ணா


எமது நண்பர் கிருஷ்ணாவும் நானும்  ஜோதிட சம்பந்தமான விஷியகளை பேசுகையில் எங்களுக்குள் ஒரு அறிய சுலபமான தகவலை அவர் எனக்கு உணர்த்தினார்...எப்பொழுதும் என்னை ஊக்கம் படுத்தும் அவர் அது எதனால் நான் தங்களை  ஊக்க படுத்துகிறேன் உங்களுள் உள்ள தன்மைகளை வெளி கொணர்கிறேன் என்ற கேள்வியே வினவினார்...

  • ஒரு உதாரணம் சொன்னார் உங்கள் ஜாதகத்தில் சூரியன் அமர்ந்து இருக்கும் பாகையே சொல்லுகள் என்றார் எனது ஜாதகத்தில் சூரியன் 279 பாகையில் உள்ளது என்றேன் அவர் அவர் ஜாதகத்தில் உள்ள பாகையே பார்க்க சொன்னார் அவருக்கு 279 பாகையில் இருந்தது எனக்கு ரொம்ப ஆச்சரியம்....பாகை எல்லோருக்கும் இது போல் அமையலாம் ...அவர்களின் நட்பு கிடைத்து விட்டால் என்ன மாதுரியான பலன்கள் நடைபெறும் என்பதை அவர் விளக்கம் அளித்தார்...

சூரியன் ஆத்மா காரகன் ஒருவரின் ஆத்மா பலம் அவனுள் மறைந்து இருக்கும் ஆற்றல் ஒருவனின் முற்பிறவியில் அவன் முயற்சியால் அவன் மேற்கொண்ட ஆத்மா ரீதியான பலன்களை சுட்டி கட்டும் கிரகம் ....பல மறைந்து இருக்கும் அல்லது அவர் நிலையே மறந்து இந்த பிறவியில் தான் யார் என்ற அறியாமல் வாழும் தன்மையின் அதிபதி ...

ஒருவனுக்கு ஆத்மா பலம் இருந்தாலும் தான் செய்வது சரியா தனக்குள் உண்டாகும் மாற்றம்கள் ஒருவனை எந்த திசையில் கொண்டு செல்லும் என்பதை நிர்ணயம் செய்ய கூடியது சந்திரன் மட்டுமே சந்திரன் என்பது கண்ணடி போன்றது நாம் அன்றாடம் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி சந்திரனின் ஆதிக்கம் கொண்டது சந்திரன் தன் மீது விழும் ஓளியே பிரதிபலிப்பாக மிளிரும் கிரகம் ...

அதை போல் நமது ஆத்மா பலத்தை மிளிர வைக்க கூடிய சக்தி மனதுக்கு மட்டும் தான் உள்ளது..அவர் சொன்ன விதியின் படி அவரது சந்திரனும் எனது சூரியனும் ஒரே பகையில் இருப்பது எனது ஆத்மா  பலத்தை அவரது மனோபலத்தால் வெளிபடுத்த முடிகிறது தூண்டிவிடும் திறன் அவரது மனம் என்னும் சாவியே வைத்து எனது ஆத்மாவை மேம்படுத்த உதவியாக உள்ளது .....அதை போல் உங்கள் ஜாதகத்தில் இந்த விதமான பல கிரக சம்பந்தம் இருப்பவர்கள் மட்டும் நன்மையும் தீமையும் வாழ்வில் ஏற்படும் நான் சொன்ன சூரியன் சந்திரனுக்கு மட்டும் அல்ல எல்லா கிரகத்துக்கு இவை பொருந்தும் மேலும் விரிவாக பிறகு எழுதகிறேன் ....நன்றி 


x

No comments:

Post a Comment