Friday, July 31, 2015

நாளை நமக்கு என்ன நடக்கும்

நாளை நமக்கு என்ன நடக்கும் என்று அறியமேலே திட்டம்கள் போடுகிறோம் பெரிதாக பணம் புகழ் மண் மனைகள் சேர்க்க வேண்டும் என்று ஓடுகிறோம் ஏன் ஓடுகிறோம் எதற்காக சேர்கிறோம் யாருக்க சேர்கிறோம் என்று அறியாமலே ஒரு கட்டத்துக்கு மேல் நம்மை நோய் ஆட்கொண்டதை உணரும் போதே சற்று நிதானம் கொள்கிறோம்.....அவை மெல்ல மெல்ல வளரும் போதும் நாம் நமது ஆசை வேகத்தை விடவதாக இல்லை..ஒரு நாள் நாம் ஏன் இங்க வந்தோம் என்ன இங்க செய்தோம் என்பதை யோசிக்க கூட கால தேவன் அவகாசம் தருவது இல்லை..

உலகம் இப்படியே செல்கிறது மனிதன்

எதையோ சேர்க்க வேண்டும் பாதுக்க வேண்டும் என்று அலைகிறான் ..தன்னை விட்டு புகழும் பெயரும் செல்வாக்கும் மறைந்து விட கூடாது என்று அவன் போராடும் வாழ்வில் சற்று அவனது உடல் நிலையில் அதை கட்டுகோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து செயல்படுகிறான் சிலர் மட்டுமே வாழ்வில் ரெண்டையும் உடலை உயிராக நினைத்து வாழ்கிறார்கள் ...

செவ்வாயின் அனுமதியும் ஆசியும் பலமும் அல்லாமல் நீங்கள் உடல் நிலையில் ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்திட முடியாது செவ்வாய் பலமாக இருந்தால் மட்டுமே நீங்கள் உடல் பயற்சியில் ஈடுபடுவீர் உடல் பற்றிய எண்ணமும் அதன் மேல் ஈர்ப்பும் தந்து பிறப்பில் இருந்தே கவனம் செலுத்தும் குணம் தருவார்...

நடைபயற்சி செய்வர்களும் தினமும் பல மைல்கள் ஓடும் பழக்கம் கொண்டவர்களுக்கும் செவ்வாயின் பலம் வேண்டும் கால்களை குறிக்கும் ராசியான 

மகரத்தில் தான் செவ்வாய் உச்சம் ஆகிறார் நமது உடலில் உள்ள இரும்பு சத்துக்கும் எலும்பின் உறுதி தன்மைக்கும் சனியின் பலம் அவசியம் அதனால் தான் மகரம் என்பது சனி செவ்வாய் பகை கிரகமாக இருப்பினும் இருவரும் சேர்கையில் ஒரு அழுத்தம் போர் குணம் விட முயற்சியும் உண்டாக்கும்..


No comments:

Post a Comment